Hadabima Authority
1978 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விவசாய சட்டவாக்கல் தாபன சட்டத்திற்கு அமைய 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் குடியேற்ற அதிகாரசபையாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சாட்டப்பட்டுள்ள பிரதான அதிகாரங்கள் ஆவன...
1. விவசாய பல்வகைப்படுத்தல் குடியேற்ற அபிவிருத்தி மற்றும் நீர் வள பிரதேசங்களை முகாமை செய்தல்.
2. நிறுவனத்திற்கு வழங்கியுள்ள காணிகளின் அதிகபட்ச திறனை பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள முகாமை.
3. விவசாய உற்பத்திகளை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல்.
4. விவசாய பல்வகைப்படுத்தல் மற்றும் குடியேற்ற அபிவிருத்தியின் பொருட்டு பொருத்தமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்குதல், பராமரிப்பு செய்தல் மற்றும் செயற்படுத்தல்.
இந்த அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு கண்டி மாவட்டத்தில் மகாவலி ஆற்றின் பகுதியில் அமையப் பெற்றுள்ள குடியேற்றங்கள் மற்றும் பெரிய நீர் போசனைப் பிரசேத்திற்கு உரிய கன்கவர் சுற்றுச்சூழல் வலயங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தில், மா ஓயா நீர்ப் பகுதியில் உள்ள கன்கவர் சுற்றுச்சூழல் வலயத்தை உள்ளடக்கிய நிலம், நில சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரிய குடியேற்றவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 5000 ஏக்கர் நிலங்களை அபிவிருத்தி செய்வது அதிகாரசபையின் பிரதான அபிவிருத்தி நோக்கமாக கொண்டுள்ளது. இந்த செயற்பாட்டின் பொருட்டு உலக வங்கி மற்றும் உலக உணவு ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக நிதி கொடைகள் வழங்கப்பட்டன.


காலனித்துவ ஆட்சி காலத்தின் போது தோட்டப் பொருளாதாரத்திற்கு பின்னர் மண் அரிப்பு மற்றும் மண் எடுத்துச் செல்லல் காரணமாக கைவிடப்பட்டு இருந்த இந்த காணிகளை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதன் பொருட்டு இந்த அதிகாரசபை திட்டங்களை மேற்கொண்டதுடன் அதன் ஊடாக மத்திய மலைநாட்டின் சுற்றுச்சூழல் உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட இருந்த சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, இலக்காகக் கொண்ட காணிகள் 5000 ஏக்கர் அளவில் திறனான விவாசய உற்பத்தி அலகாக மாற்றம் பெறுவதற்கு இயலுமாக இருந்தது. கருத்திட்ட காலப்பகுதியில் இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்காக அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு திறமையான ஆய்வு கற்கைக்குப் பின்னர் அதிகார சபையின் செயலாற்றுகை மற்றும் கருத்திட்ட அதிகாரப் பிரசேங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு செயற்படுத்துவது தொடர்பில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைய 1991 ஆம் ஆண்டு இலக்கம் 687/15 கொண்ட அதிவிஷேட வர்த்தமான அறிவித்தலின் ஊடாக அதிகார சபையின் உத்தியோகப் பூர்வ பெயர் இலங்கை பச்சைப் புல்வெளி அபிவிருத்தி மத்திய அதிகார சபை என திருத்தம் செய்யப்பட்டு கருத்திட்ட அதிகார பிரசேங்களாக கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. இந்த அதிகார சபையின் பொருட்டு பெற்றுக் கொடுக்கப்பட்ட உலக உணவு நன்கொடை முடிவுற்றதன் பின்னர் அன்றைய திகதி முதல் இன்றுவரை அதிகார சபையின் நடவடிக்கைகள் பொதுத் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டினால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கு அமைய பொதுத் திறைசேரியின் வருடாந்த நிதி ஒதுக்கீடு எல்லைகளுக்கு அமைய வருடாந்தம் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்படுகின்ற செயற்பாட்டு திட்டமிடலுக்கு அமைய இந்த நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இலங்கை ஹதபிம அதிகார சபையை நிறுவுதல் மற்றும் அதன் அதிகாரங்களை

1978 - தேசிய விவசாய பல்வகைப்படுத்தல் மற்றும் குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபை (NADSA).
1991 - இலங்கை பச்சைப் புல்வெளி மத்திய அதிகாரசபை (ஹதபிம) என பெயர் மாற்றப்பட்டது.